திரு. பியூஷ் பாண்டே:

தங்கள் உழைப்பு, தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அங்கீகரிக்கப்படவில்லை என்று சில நேரங்களில் உணரும் மக்களுக்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்ல விரும்புகிறீர்கள்?

சத்குரு:

உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையா?

பாருங்கள், இவை இரண்டு எதிர் துருவங்கள். "எனக்கு இதை எல்லாம் பற்றி கவலையில்லை" என்பது வேலை செய்யாது, குறிப்பாக நீங்கள் சில்லறை வியாபாரத்தில் இருந்தால். "எனக்கு இதை எல்லாம் பற்றி கவலையில்லை" என்று சொன்னால், உங்கள் வியாபாரம் முடிந்தது என்று அர்த்தம். அதேநேரத்தில், "என் உழைப்பு தேவையான பலனைத் தரவில்லை" என்று நினைப்பது - நிறைய பேர் இப்படி தான் கவலைப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் சொல்வது என்னவென்றால், உங்கள் மதிப்பீட்டில் நீங்கள் சிறப்பாக செய்திருக்கலாம், ஆனால் உலகமும் அதை அங்கீகரிக்க வேண்டும். நீங்கள் செய்வதில் மதிப்பு இருப்பதை வேறு யாராவது பார்க்க வேண்டும், அப்போது தான் அது அங்கீகாரத்தைப் பெறும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் செய்வது அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தான் அவர்கள் "இது அற்புதமானது!" என்று சொல்வார்கள். நீங்கள் செய்வது சிறப்பானது என்பதால் அல்ல.

அது மதிப்புமிக்கது என்று நீங்கள் உணர்ந்தால், அதைச் செய்கிறீர்கள், அதனால் மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் - நீங்கள் செய்வது அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தான் அவர்கள் "இது அற்புதமானது!" என்று சொல்வார்கள். நீங்கள் செய்வது சிறப்பானது என்பதால் அல்ல. எனவே, "எனக்கு யாரையும் பற்றி கவலையில்லை" என்ற மனநிலை நிச்சயமாக வேலை செய்யாது. ஆனால் மற்றவர்கள் உங்களை அங்கீகரிக்கிறார்களா இல்லையா என்பது, குறிப்பிட்ட நேரத்தில் அது மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. அது நாம் மேற்கொண்டுள்ள வேலையின் தன்மையைப் பொறுத்தது.

சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்

இன்று நான் எங்கு சென்றாலும், மக்கள், "இவர் ஒரு யோகி, இவர் ஒரு ஞானி" என்று சொல்கிறார்கள். யோகி அல்லது ஞானியைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, சரியா. யோகி என்றால் என்ன, ஞானி என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. இப்போது, இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் கைத்தட்டுகிறார்கள். நான் கடந்த 35 ஆண்டுகளாக அதே விஷயங்களை தான் சொல்லி வருகிறேன். அப்போது யாரும் அதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.

இப்போது, எங்கோ அமெரிக்காவில் மக்கள் கைத்தட்டுகிறார்கள், அதனால் இங்கேயும் அவர்கள் கைத்தட்ட தொடங்கிவிட்டார்கள், சரியா. இந்த அங்கீகாரம் அனைத்தும் எனக்கு எந்த அர்த்தத்தையும் கொடுக்கவில்லை. ஒரு நாள் மக்கள், யோகியாக இருப்பது என்றால் என்ன என்பதை உண்மையாகவே அங்கீகரித்து, அவ்வாறு ஆவதற்கு ஊக்கம் பெற்றால், அது அற்புதமானது. நிச்சயமாக, நிறைய மக்கள் அதன் மூலம் ஊக்கம் அடைந்திருக்கிறார்கள்.

ஆனால் நான் இதை உங்களிடம் சொல்கிறேன், என் குடும்பத்தினர் உட்பட, என்னைச் சுற்றியுள்ள மக்கள் கூட, நான் அப்போது ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தால், அதே யோகிதான், உலகில் எனக்கு எந்த அங்கீகாரமும் இல்லை என்றால், நான் ஒரு யோகியாக இருப்பதைப் பற்றி அவர்கள் எதுவுமே கண்டுகொள்ள மாட்டார்கள், புரிகிறதா? இன்று, இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், அனைவரும், "அவர் ஒரு சிறந்த யோகி" என்று சொல்கிறார்கள். யோகி என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. நிறைய மக்கள் அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருப்பதைக் காண்கிறார்கள், அதனால் அங்கீகரிக்கப்படுகிறது.

நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும், மக்கள் நான் யார் என்ற உண்மையான தன்மையை அங்கீகரிக்கவில்லை, என்னால் அவர்களுக்கு கிடைக்கும் பயனைத்தான் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். அந்த பகுதி மட்டும் தான் அங்கீகாரம் பெறுகிறது. நானாக இருக்கும் அந்த தன்மையை - சிலர் மட்டுமே அங்கீகரிப்பார்கள், மற்றவர்கள் அதை என்னவென்று கூட அறியமாட்டார்கள், அது பரவாயில்லை.

ஆனந்தத்தின் வெளிப்பாடாக செயல் இருக்கட்டும்!

திரு. பியூஷ் பாண்டே:

நீங்கள் செய்யும் செயல்களைத் தொடர்ந்து செய்யுங்கள். ஒரு நாள் மக்கள் அவர்கள் வாழ்க்கையில் அதன் பயனைக் காண்பார்கள், மக்கள் கைத்தட்ட தொடங்கியவுடன் அவருக்கான நேரம் வந்தது போல உங்கள் நேரம் வரும். ஆகவே, அனைத்து ரீட்டெயில் தொழிலாளர்களும், உலகம் என்ன நினைக்கிறது என்று கவலைப்படாதீர்கள், நீங்கள் செய்யும் செயலைத் தொடர்ந்து செய்யுங்கள். நான் சரியாக சொல்கிறேனா?

சத்குரு:

அது உங்களுடைய புரிதல். நான் சொல்வது, உங்கள் வேலை உங்கள் ஆனந்தத்தின் வெளிப்பாடாக இருந்தால், அங்கீகாரம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், அதன் முக்கியத்துவம் என்ன? நீங்கள் உங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பைப் பெறுகிறீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் ஆனந்தத்தைத் தேடிக்கொண்டிருக்கும் அந்த தருணங்களில், அந்த தருணங்களின் தன்மை என்ன, நீங்கள் உங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் தருணங்களில், அந்த தருணங்களின் தன்மை என்ன என்பதைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் தருணங்கள் தான், உங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலை உங்கள் ஆனந்தத்தின் வெளிப்பாடாக இருந்தால், நீங்கள் வேலை செய்யும் தருணங்கள் உங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களாக இருக்கும்.