சத்குரு, கவிஞரும் துறவியுமான கபீரின் கதையையும், தற்போதைய ஈரான் மற்றும் ஈராக் பகுதியில் இருந்த புகாரா நகரின் மன்னன் இப்ராஹீமின் கதையையும் விவரிக்கிறார். மன்னனுக்கு ஆன்மீக அனுபவத்தை பெற வேண்டும் என்ற ஆழ்ந்த ஏக்கம் இருந்தபோதிலும், அவனது மனதில் குவிந்திருந்த குப்பைகளே அவனது ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்பதை கபீர் உணர வைத்த விதத்தை விளக்குகிறார். கபீர் மன்னனின் கண்ணோட்டத்தை மாற்றி, அதன் மூலம் அவர் வாழ்க்கையையே மாற்றியது போல, ஒருவரின் அசுத்தத்தை அவரது உள் வளர்ச்சிக்கான உரமாக மாற்ற முடியும் என்பதை சத்குரு நமக்கு எடுத்துரைக்கிறார்.