Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
நம்மிடம் என்னதான் திறமையும், ஆற்றலும், மதிநுட்பமும் இருந்தாலும் - சமநிலை என்ற ஒன்று இருந்தால்தான் அவையெல்லாம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஒரு முழுமையான சக்தி உடலைக் கொண்ட உச்சமான உயிர் போன்றது தியானலிங்கம். சிவபெருமானே இங்கு அமர்ந்திருக்கிறார்.
யோகா - உடல், மனம், ஆன்மீகம் ஆகிய பரிமாணங்களில் அதிசயிக்கும்படி வேலை செய்யும். ஒரே விஷயம், நீங்கள் அதை செய்ய வேண்டும்.
வாழ்வில் முன்னோக்கி நகர்கிறோமா என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நேற்று இருந்ததை விட இன்று கொஞ்சம் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேனா என்று பார்த்தாலே போதும்.
தற்போது எங்கே இருக்கிறேன் என்பதைப் பற்றி நீங்கள் தெள்ளத் தெளிவாக இருக்கும்போது, அடுத்த நிலையிலான அனுபவம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
மனிதர்கள் வெற்றி பெறக் காரணம், கஷ்டப்பட்டு செயல் செய்தார்கள் என்பதில்லை. அது வேலை செய்யும் விதத்தில் அதனை செய்கிறார்கள், அவ்வளவுதான்.
உங்கள் உடலிலும், மனதிலும், உணர்வுகளிலும் நீங்கள் விரும்பும் சூழலை உருவாக்க முடிந்தால், உங்களின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நல்வாழ்வு எல்லாம் கவனித்துக்கொள்ளப்படும்.
உங்களுக்கு பிடித்தவை என இருப்பவற்றின் எல்லைக்குட்பட்டு இருப்பதை விட, உங்களின் இந்த கட்டுப்பாடுகளை தாண்டிப் போவது மிக மிக முக்கியம்.
வாழ்வின் முரணே இதுதான்: நீங்கள் எண்ணற்ற பொய்களை உருவாக்கலாம், ஆனால் இருப்பது என்னவோ ஒரே ஒரு உண்மைதான்.
போதிய கவனம் இருக்குமென்றால், எதில் வேண்டுமானாலும் கைதேர்ந்து வல்லமை பெறலாம்.
வாழ்க்கையை நீங்கள் ஆழமாக புரிந்து உணர விரும்பினால், உங்களைப் பற்றி அடுத்தவர்கள் கொண்டுள்ள அபிப்ராயங்கள் உங்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது.
கஷ்டமான காலங்களை உங்களுக்குள் நயமாக கடக்க முடிந்தால், நாம் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையும் நம் வாழ்வை மேம்படுத்தும் ஒரு வாய்ப்பு என்று உணர்வீர்கள்.